வியாழன், 19 பிப்ரவரி, 2009

காதல் - ஓர் அதிசயம்

காதல்!!!
இந்த மூன்று எழுத்து மந்திரச்சொல்
எத்தனை வேலைகள் செய்கிறது!!!!

ஓர் இளைஞனின் உயிரைத்தட்டித் திறக்கும் சாவியாய்!

ஒருவனுக்கு தாரம் எனும் இன்னொரு தாயைத் தரும் கடவுளாய்!

வழி தெரியாத ஒருவனுக்கு திசைகாட்டும் கருவியாய்!

அமாவாசையின் இருளில் ஓர் அதிசய நிலவொளியாய்!

சூரியனில் மிதக்கும் வானவில்லின் வர்ணஜாலமாய்!

உயிருக்குள் இன்னொரு உயிராய்!

காதல்!!!
ஓர் அதிசய வேதியியல் மாற்றம் !!!!!!...........

--- மகி

1 கருத்து: